GrassField

 

சித்திரைத் திருவிழா

Page history last edited by Pandian R 1 yr ago

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயிலில் ஆண்டு முழுதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இறைவனின் 64 திருவிளையாடல்கள், வெவ்வேறு காலங்களில் நடைபெறும் இவ்விழாக்களில், சித்தரிக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய விழாக்களுள் முக்கிய இடம் பெற்றுள்ள இவ்விழாக்களுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து வரும் மக்கள் வெள்ளம் சிறப்பான பார்வையை ஏற்படுத்துகிறது.

சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மிக முக்கியமான விழாவாகும். மீனாட்சி பட்டாபிஷேகமும், மீனாட்சி திருக்கல்யாணமும் இவ்விழாவில் நடக்கின்றன. மேலும் இந்த விழா திருமாலிஞ்சோலை என்று அழைக்கப்படும் அழகர் கோயிலையும் சம்பந்தப்படுத்துகிறது. இதனால் இவ்விழா நடக்கும் மாதத்தில் மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூணுவது இயற்கை.

சித்திரைத் திருவிழா, சித்திரையில் வளர்பிறை 5ம் நாளில் ஆரம்பிக்கும். மேற்சொன்ன நிகழ்ச்சிகள் 8, 9 மற்றும் 10ஆம் நாட்களில் நடக்கின்றன. எட்டாவது நாள் அன்னை மீனாட்சி, பட்டாபிஷேகம் நடந்து வெள்ளி அரியணை ஏறுவார். 9ஆம் நாள் மீனாட்சி வெற்றிப் பயணம் (திக்விஜயம்) முடிந்து 10ஆம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கும். (சித்திரை மாதத்தில் ப்ரம்மோத்ஸவம் நடக்கும் அனைத்து சிவாலயங்களிலும் சித்ராபவுர்ணமி அன்று திருக்கல்யாணம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)

அந்த நாளிற்குப் பிறகு, விழா வைகைக்கரைக்கு மாறுகிறது. அந்த நாளில் மீனாட்சி-சுந்தரேசுவரர் தம்பதிகளை இல்லறத்தில் விட்டுவிட்டு நாடு முழுவதும், அழகர் வருகைக்காக அதிகாலையில் வைகை ஆற்றோரம் காத்துக்கிடக்கிறது. அழகர், மதுரைக்கு வடகிழக்கில் 25 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அழகர் கோயிலின் பெருமாள் ஆவார். கள்ளழகரான விஷ்ணு தன் தங்கையை சுந்தரேசுவரருக்குக் கொடுத்ததாக புராணச் செய்திகள் உண்டு. இதனை சிரமேற்கொண்டு, கள்ளழகர் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். திருப்பரங்குன்றத்தின் நாயகர் சுப்பிரமணியர் ஊர்வலத்தை தலைமையேற்று நடத்துகிறார். அந்த வழி முழுவதும் நிரம்பியிருக்கும் கூட்டத்தை நாம் பார்க்கும்போது, நம்மை அறியாமல் பரவசம் நம்மை அள்ளிக் கொண்டு போகிறது.

இந்த அழகர் அழைப்பிற்குப் பின் ஒரு சுவையான கதை உண்டு. அழகர் மீனாட்சியின் சகோதரர் ஆவார். அவர் மீனாட்சியின் திருமணத்தை நடத்திவைக்க அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். ஆனால் தான் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்ததை கேள்விப்படுகிறார். ஆற்றில் கூட கால் படாமல் திரும்பி வருகிறார். தற்போதைக்குக் கூட அந்த சடங்குகள் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நடக்கின்றன. அழகர் தற்போது ஆற்றில் தன் காலைப் பதித்துவிட்டுச் செல்லும் அந்தக் காட்சி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த நாளில் நடைபெறும் காளைகள்/பசுக்கள் சந்தை மிகவும் புகழ்பெற்றது. மகிழ்வில் உண்டான ஆரவாரமும், உற்சாகத்தில் உண்டான களிப்பும் நிறைந்த அந்த மனநிலை நகர மக்களுக்கு அன்று முழுதும் இருக்கிறது. மக்கள் கூட்டம் பெருமளவில் இங்கு கூடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். அன்றைய நாளில் திருவிழாவோடு ஒரு வியாபார சந்தையும் நடப்பது வாடிக்கையாகி விட்டது.

 

சித்திரைத்தேர்

அழகர் கோயிலுக்கு வருமானம் தரும் திருவிழாக்களுல் இது முதலாவதாகத் திகழ்கிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை உண்டியல் பணமாகவும், நகைகளாகவும் செலுத்திவிட்டுப் போகின்றனர். அன்றைய நாளின் அழகர் அலங்காரமும், அவர் வரும் ரதத்தின் அழகும் பார்ப்போர் மனதைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.

சித்திரைத் திருவிழா மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அதனால்தான் இன்றும் திருவிழா ஊர்வலங்கள் மாசிவீதிகளையே பயன்படுத்துகின்றன. நாயக்கர் காலத்தில் அழகர்கோயிலும் இவற்றுடன் சம்பத்தப்படுத்தப்பட்டு சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

11ஆம் நாள் நடக்கும் தேர்திருவிழா இந்த வருடாந்திர திருவிழாவை மங்களகரமாக முடித்து வைக்கிறது.

Comments (0)

You don't have permission to comment on this page.