
ராணி மங்கம்மாள் மண்டபத்திற்கு எதிர்புரம் கருப்பு மார்பிள் மண்டபமும் அதன் விதானத்தில் ஒரு ஊஞ்சலும் தொங்குகிறது. இதுதான் ஊஞ்சல் மண்டபம் ஆகும். இங்குதான் மீனாட்சி-சுந்தரேசுவரர் விக்கிரகங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குக் கொண்டுவரப்பட்டு சம்பிரதாய ஊஞ்சலாட்டு நடத்தப்படும். தெய்வத்திருப்பாடல்கள் இசைக்க, மீனாட்சி அம்மாவும், சுந்தரேசுவரரும் ஊஞ்சலாடுவது காணக்கிடைக்காத காட்சி. இந்த சிலைகள் முறையே 45 மற்றும் 35 செண்டிமீட்டர் ஆக இருக்கலாம். அந்தச் சிலைகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே வழிபாட்டில் இருந்து வருகின்றன.

இந்த மண்டபத்தின் அருகில் உள்ள மேற்குக் கரையின் கூரையில் உள்ள தற்கால ஓவியங்களும், பக்கவாட்டில் உள்ள சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சிவனின் திருவிளையாடல்களும் புராணக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

Comments (0)
You don't have permission to comment on this page.