
அங்கு எல்லாம் வல்ல சித்தரின் இடம் ஒன்று உள்ளது. சுந்தரேசுவரர் தனது அவதாரங்களுள் ஒன்றில் அதிசயங்கள் செய்யும் சித்தராக மதுரையில் தோன்றியிருக்கிறார். குருடரைப் பார்வை பெறச் செய்தும், செவிடரைக் கேட்கும் திறன் பெறச் செய்தும், கால் ஊனமுற்றவரை நடக்கச் செய்தும் பல அதிசயங்களை அரங்கேற்றியிருக்கிறார். அவரது புகழ் நாடெங்கும் பரவியிருக்கிறது. அந்தச் செய்தி மன்னரின் காதுகளை எட்டியது. உடனடியாக அந்த சித்தர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் தனக்கு வேலை இருப்பதாகக் கூறி ராஜஆணையை சித்தர் மறுத்துவிட்டார்.
ஒரு நாள் எதேச்சையாக மன்னரும் சித்தரும் கோயிலில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர். அவரது சக்தியைச் சோதிக்க வேண்டி மன்னவர், ஒரு கல்யானைக்கு கரும்பை சாப்பிடக் கொடுத்தார். எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், அந்தக் கல்யானை கரும்பைத் தின்னது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்தது. தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார். அந்தச் சித்தரின் நினைவாக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இன்றும் எல்லா வரம் கொடுக்கும் சித்தரின் திருவிளையாடல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
Comments (0)
You don't have permission to comment on this page.