தட்டுசுட்டார் மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் வழியாக கோயிலில் நம் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏழுகடல் நோக்கி விரைகிறோம். ராஜகோபுரத்திற்கு வெகு அருகிலேயே உள்ள தடாகத்திற்கு ஏழுகடல் என்று பெயரிடப்பட்டுள்ளது. மீனாட்சியின் தாயார் கடலில் குளித்து புண்ணியம் பெற விரும்பினார். அவரது அவல் சுந்தரேசுவரரிடம் வெளிப்படுத்தப்பட ஏழுகடல் நீரும் பொங்கிவந்து அங்கு விழும்படி செய்தார் இறைவன். மீனாட்சியின் தாயாரின் விதவை நிலை தன் ஏழுகடல் செயலுக்கு முழு வெற்றியளிக்காது என்பதை உணர்ந்த இறைவன், அவரது கணவருக்கு உயிரளித்து, அவர்கள் நீராடலை முடித்து வந்தபோது, வானிலிருந்து வந்த வாகனத்தில் அவர்கள் ஏறி அவர்கள் தேவலோக பதவி அடைந்ததாக கதை உண்டு.
ஆனால் தற்போது ஏழுகடலின் நிலை சற்று மகிழ்ச்சியளிக்காததாக உள்ளது. குப்பை கூளங்கள் நிறைந்த அந்தக் குளத்தை எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவு மாசுபடுத்தியிருக்கின்றனர் மதுரை வியாபாரிகளும், மக்களும். என்ன செய்வது, வீட்டைச் சுத்தமாக வைத்திருந்து வீதியை அசுத்தப்படுத்தும் குணம் தானே நம்மில் பெரும்பாலோருக்கு உள்ளது.
Comments (0)
You don't have permission to comment on this page.