GrassField

 

கம்பத்தடி மண்டபம்

Page history last edited by Pandian R 1 yr ago

 

நுழைவாசலுக்கு எதிரே நந்திதேவர் இருக்கிறார். அவருக்கு அருகிலேயே, கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது. இநத மண்டபம் கம்பத்தடி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தைத் தாங்கும் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் நம் மனதைக் கொள்ளையடிப்பதை உணரலாம். கலைஞனின் உருவான இந்த அமைதியான வெளிப்பாடுதான் அவனுக்கு கலைச் சிம்மாசனத்தை அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தென்மேற்கில் உள்ள, கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)

கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?

இந்த முழுச் செய்தியும் அந்த சிற்பம் குறையில்லாமல் வெளிப்படுத்துகிறது. அமைதியான சிவன், பயந்த பார்வதி, சிவகணங்கள் மேலிருக்க, பத்து கைகளால் மலையைத் தூக்கி, மீதி பத்து கைகளால் வீணை வாசிக்கும் இராவணன் என்று, நம் நினைவை அள்ளிக்கொண்டு போகிறது இந்த சிற்பம். இந்தச் சிற்பம் பிற்காலத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மண்டபம் கி.பி. 1770ல் கட்டப்பட்டது.

 

உள்பிரகாரத்திலிருந்து வாசல் வழியாக கம்பத்தடி மண்டபத்தை விட்டு வெளியில் வருகிறோம். அந்த வாசல் நடைபாதையில் பைரவர், வீரபத்ரர், சபாபதி மற்றும் காளியின் நான்கு பெரிய சிலைகள் காணப்படுகின்றன. அந்தச் சிலைகள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுளளன. ஒவ்வொன்றுக்கும் தனிதன்மை பிரதிபலிக்கிறது. முதல் சிற்பம் அளவீடுகளிலும், இரண்டாவது கலை நுணுக்கத்திலும், மூன்றாவது முக அமைதியை பிரதிபலிப்பதிலும், நான்காவது பயத்தை ஏற்படுத்துவதிலும் என்று கலை அந்தச் சிற்பங்களில் தாண்டவமாடியிருக்கிறது. இந்த சிற்பங்கள் இருட்டான ஒதுக்குப்புறத்தில் உள்ளதால் அதிகம் பார்வையாளர்கள் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் காந்தாரம் மற்றும் கிரேக்கக் கலைகளுடன் ஒப்பீடு செய்யத்தக்க தென்னிந்திய சிற்ப வேலைப்பாடுகள் இந்த சிற்பத்தில் உள்ளன.

அங்குள்ள ஒரு வயதான பெண்ணின் சிலை காஞ்சனமாலா என்று நமக்கு சொல்லப்படுகிறது. இவர் மிகவும சோகமாக அமர்ந்துள்ளார். இந்த வயதான தாய், மீனாட்சியை வளர்த்தவராவார். தன் மகளை ஒரு ஆண்டிக்கு (சிவபெருமான்) மணமுடித்துவிட்டோ மே என்று அவர் கவலைப்படுவதாக அர்த்தப்படுத்தப்பட்டு உள்ளது.

Comments (0)

You don't have permission to comment on this page.