
ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து மீனாட்சி நாயக்கர் மண்டபம் செல்லும் வழியில் உள்ளது கல்யாண மண்டபம். ஏப்ரல் மாதத்தில் இங்கு இறைவன் திருக்கல்யாணம் நடக்கும். இந்த மண்டபம் மிகச்சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் பெரியதாகவும், அடிக்கடி சமய/பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாகவும் உள்ளது. இந்த அரங்கத்தின் ஒரு மூலையில், சிவனின் பானை வயிற்றினை உடைய பணியாள் குண்டோ தரன் உள்ளார்.
குண்டோதரன் மதுரையின் புராண வரலாற்றில் சுவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்தவுடன், விருந்துக்குத் தயார் செய்த உணவில் பெரும்பாதி தங்கிவிட்டது. அதனை அறிந்த மீனாட்சி சற்று பெருமையுடன், சிவனின் குறைவான விருந்தாளிகளைப் பற்றி பேசினாள். அதனைக் கேட்ட சிவன், மற்றவர்களுக்கு இல்லாமல் உணவு தீர்ந்து விடுமோ என்று தன் பணியாளர்கள் யாரையும் சாப்பிட அனுப்பவில்லை என்றும், முடிந்தால் அவர்களுல் ஒருவருக்கேனும் அவர் திருப்திப்படும் வரையில் சாப்பிட வைக்க முடியுமா என்று கேட்டார். அப்போது வந்தவர்தான் குண்டோ தரன். குண்டோ தரனின் பசிக்கு சமைத்திருந்த உணவு நிமிடத்தில் காலியாகவே, களஞ்சியத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்து தானியங்களும் சமைத்து அவனுக்குத் தர, அதுவும் காலியானது. சாப்பாட்டிற்குப் பின், தாகமென்று கூறி ஊர் முழுதும் உள்ள குளம், குட்டை என்று ஒன்றையும் மீதி வைக்காமல் தண்ணீர் குடித்த குண்டோ தரன் தனக்கு இன்னும் தாகமெடுக்கிறது என்று கூறி மீனாட்சி முன்னிலையில் சிவனிடம் முறையிட, சிவன் தரையில் கைவைத்தபோது பீரிட்டு எழுந்த தண்ணீர் ஊற்றுதான் வைகை ஆறாக ஓடுகிறது என்று போகிறது கதை. இவ்வாறு பெரியஉருவத்தை உடைய குண்டோ தரன் மூலம் மதுரைக்கு ஒரு நண்மை கிடைத்திருக்கிறது.
Comments (0)
You don't have permission to comment on this page.