பாசமிகு அன்னை மீனாட்சியைத் தரிசித்த பின்னர் அவளிடம் விடைபெற்று சண்டிகேஸ்வரரைச் சந்திக்கிறோம். மீனாட்சி அம்மன் ஆலயத்தைவிட்டு வெளியே வரும் முன் அந்த நல்ல மனிதரிடமும் விடை பெற்று வருகிறோம். இவர் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அதனால் நம் கைகளைத் தட்டி அவர் கவனத்தை நம்மிடம் திருப்பி வணங்குகிறோம். அன்னை மீனாட்சியின் துணையான இறைவன் சுந்தரேசுவரர் (சிவன்) கிளிக்கூண்டு மண்டபத்திற்கு வடக்கில் வீற்றிருக்கிறார். எனவே வடக்கு நோக்கி முன்னேறி, முக்குருணி விநாயகரைத் தரிசனம் செய்துவிட்டு சுந்தரேசுவரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நுழைகிவோம்.
Comments (0)
You don't have permission to comment on this page.