GrassField

 

சாட்சிக்கிணறும் சாட்சி லிங்கமும்

Page history last edited by Pandian R 1 yr ago

இதற்கருகில் துர்கையம்மனுக்கான மாடம் ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் ஒரு கடம்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் அடியில் இந்திரன் அமர்ந்து சிவனை சிந்தித்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

 

முற்காலத்தில் கடம்பமரக்காடுகள் நிறைந்திருந்ததற்கு அடையாளமாக இன்றும் அந்த மரம் மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த விருட்சத்திற்கு மிகுந்த மதிப்பளித்து வருகின்றனர். அதற்கு வெகு அருகிலேயே சாட்சிக் கிணறு உள்ளது. சாட்சிக் கிணற்றின் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது.

 

மதுரைக்கு அருகில் வாழ்ந்த ஒரு வாணிகருக்கு ஏராளமான சொத்துக்களும் ஒரு அழகான மகளும் இருந்தனர். அவர் தன் மகளை அவளது முறை மாப்பிள்ளைக்கு மணம் செய்ய விரும்பினார். துரதிருஷ்ட வசமாக அவர் இறந்து போகவே, அந்த மாப்பிள்ளை கிராமத்திற்கு வந்து அவர் சொத்துக்களை எடுத்துக்கொண்டும், அவர் மகளைக் கூட்டிக்கொண்டும் சென்றான். அங்கும் விதி விளையாடவே, அவன் பாம்பு தீண்டி இறந்தான். இந்த சோக நிகழ்ச்சியைக் கேட்டறிந்த திருஞான சம்பந்த பெருமான், அந்தப் பெண்ணின்பால் கருணை கொண்டு, அவனது மாப்பிள்ளையை உயிர்பித்தார். அதோடு, ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு அவர்கள் திருமணத்தை நடத்திச் சென்றார்.

 

அதன் பின்னால்தான் உண்மை தெரிய வந்தது; அவன் ஏற்கனவே மணம்முடித்தவன் என்பது. வெகு சீக்கிரமே இரு பெண்களுக்கெதிரில் பிரச்சிணை எழுந்தது. முதல் மனைவி, இரண்டாம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கேட்க, சாட்சிக்கிணறும் லிங்கமும் அந்த இடத்திற்கு வந்து சாட்சி கூறியதாகவும், அதன் பின்னர் அந்த மூவரும் மீனாட்சியம்மன் கோயிலை நினைவில் கொண்டு வாழ்ந்ததாக அந்தக் கதை இயம்புகிறது.

Comments (0)

You don't have permission to comment on this page.