முக்குருணி நாயகரின் அனுமதியோடு உள்ளே உள்ள மூன்று பிரகாரத்திற்கு நாம் முன்னேறுகிறோம். அவை உயரமாகவும், அகலமாகவும், விளக்குகள் மூலம் நன்கு ஒளிப்படுத்தப் பட்டுள்ளது. பிரகாரத்தைக் கடந்து சுந்தரேஸ்வரர் சந்நிதி முன் இருக்கும் தூண்கள் நிறைந்த முன்மண்டபத்திற்கு வருகிறோம். ஒவ்வொரு தூண்களிலும் ஒவ்வொரு இறைவடிவங்கள் காணப்படுகின்றன.

சொக்கநாதரைச் சந்திக்கும் முன் அவரது காவலாளிகள் வெளியே இருவர், உள்ளே இருவர் என்று நான்கு பேரைச் சந்திக்கிறோம். உள்ளே உள்ள காவலாளிகள் மதுரையின் இரு அரசர்களாவர். அவர்களின் அருகில் உள்ள சுவரில் கல்சுவரில் உள்ள கல்வெட்டுகள் இன்னும் படியெடுக்கப்பட்டதா என்று சந்தேகம் நிலவுகிறது. உட்பிரகாரத்தின் தெற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் 63நாயன்மார்களின் சிலைகள் உள்ளன.
அவர்களின் தெய்வீகம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றினை பெரியபுராணத்தின் மூலம் அறியலாம். அந்தப் பிரகாரத்தின் மற்றொரு கோடியில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அவருக்கு அருகிலேயே உத்சவ விக்கிரகங்கள் இருக்கும் அறையும் உள்ளது. பிரகாரத்தின் மேற்குப் பகுதியின் கடைசியில் மார்பிள் கற்களால் ஆன காசி மற்றும் பெனாரஸ் விஸ்வநாதரைக் காணலாம். அந்தச் சிலைகள் காலம் சென்ற பெனாரஸ் மன்னர் ஒருவரின் தென்னிந்திய புனித யாத்திரையின்போது அவரால் பரிசாகத் தரப்பட்டன.
Comments (0)
You don't have permission to comment on this page.