GrassField

 

சுந்தரேஸ்வரர் ஆலயம்

Page history last edited by Pandian R 1 yr ago

முன்னரே சென்று புனித சுந்தரேசுவரர் ஆலயத்தை அடைகிறோம். அழகான சிறிய இந்தக் கோயில், எட்டு யானைகள் தாங்கும் தங்கத்தகடு பதிக்கப்ட்ட விமானத்தை உடையது. இந்தக் கோயிலின் மத்தியில் சிவன் லிங்க ரூபமாக இருக்கிறார். சுந்தரேசுவரர் என்ற பெயர் கொண்டு மக்களை இன்றும் காத்து வருகிறார். கட்டிடக்கலையைப் பொருத்தவரை மிகச்சிறந்ததாக இந்தக்கோயில் விளங்குகிறது. கைலாயத்து சிவனை தெற்கு நோக்கி இழுத்த கோயிலாற்றே!

மும்மூர்த்திகளில் சிவன் மூன்றாமவர். பிரம்மா படைக்க, விஷ்ணு காக்க, சிவன் அழிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். அதனால் அவருக்கு ருத்ரர் என்ற பெயர் உண்டு. அழித்தல் என்பது ஆக்கத்திற்கு வித்திடுவதாகும். எனவே சிவன் உருவாக்கத்திற்கு உதவுபவராக இருந்து வருகிறார். அவரது தோற்றம் பொதுவாக மற்றவருக்கு திகைப்பை ஏற்படுத்தும். பாம்புகளைத் தன் கழுத்திலும் உடலிலும் சுற்றிக்கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலை உடம்பில் பூசிக்கொண்டு, பூதங்கள் புடைசூழ, அரக்கர்கள் சுற்றிவர ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சித்தரிக்கப்படுகிறார். நடனமக்கள் புடை சூழ தனது தேவி பார்வதியுடன் உக்கிரமாகத் தாண்டவமாடும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும். மூன்று கண்களை உடையவர் சிவன், நெற்றியில் உள்ள மூன்றாவது கண், அறிவையும், கீர்த்தியையும் குறிப்பது. உலகைக்காக்க ஆலகால விஷத்தை விழுங்கியதால் இவரது மேனி நீலமாகக் காட்சியளிக்கிறது. தலையில் பிறையை அணிந்த இவர், கர்வம் கொண்ட கங்கையைத் தன் சடாமுடியினுள் கட்டி அடக்கியவர். ஐந்து தலைகளும் நான்கு கைகளும் உடைய சிவன், தன் கையில் திரிசூலம் ஏந்தியிருக்கிறார், மேனியில் மான்தோலை உடுத்தியுள்ளார். அடிக்கடி புலித்தோலில் அமர்ந்து ஒரு மானைக் கையில் ஏந்தியிருப்பார். அவரது உதவியாளர் நந்தி, அம்பு அஜகவம், பறை டமரு. இவரது குழு கத்வாகம் என்று அழைக்கப்படுகிறது. கைலாயத்தில் வீற்றிருக்கும் இவர், கோயில்களில் பல்வாறாகச் சித்தரிக்கப்படுகிறார்.

சொக்கநாதரைப் பற்றி மேலும் சில செய்திகளைச் சேர்க்க உதவி செய்வீர்களா?

மதுரையை ஆண்ட அந்த மன்னவரிடம் விடைபெற்று நம் பயணத்தை இரண்டாம் சுற்றில் நிறுத்துகிறோம். அங்கு இருக்கும் பழநியின் நாயகர் தண்டாயுதபாணியைப் பார்க்கிறோம்-உலகம் துறந்த நிலையில். சற்று தூரத்தில் நவகிரகங்கள் உள்ளன. அவை யாவும் ஒன்றையொன்று நேரடி பார்த்துக்கொள்ளாது என்பது நமது சிற்ப சாஸ்திரம் சொல்லும் குறிப்பு.

Comments (0)

You don't have permission to comment on this page.