GrassField

 

திருச்சுற்றின் தொடக்கம்

Page history last edited by Pandian R 1 yr ago

தற்போது நாம் கோயிலை எப்படி வலம் வரப்போகிறோம் என்று சிந்திப்போம். அனைத்து கலைப் பொருட்களையும் பார்க்க ஏதுவாக, நாம் புதுமண்டபம் வழியாக இராஜகோபுரத்தை அடைவோம். கோயிலுக்கு வெளியில் உள்ள அந்த சித்திரை வீதிகளை ஒரு வலம் வந்து நான்கு கோபுரங்களையும் பார்த்தபின்னர் அம்மன் வாயில் வழியாக உள்ளே நுழைவோம். மீனாட்சி நாயக்கர் மண்டபம், சித்ர கோபுரம், முதலி மண்டபம், பொற்றாமரைக்குளம், ராணிமங்கம்மாள் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம் வழியாக அன்னை மீனாட்சி சந்நிதியை அடைவோம்.

 

அங்கு அன்னையை வழிபட்டபின் சண்டிகேஸ்வரர் சன்னதி வழியாக முக்குருணிப் பிள்ளையாரை வணங்கி சுந்தரேசுவரர் கோயில் பிரகாரத்தைச் சுற்றுவோம். சாட்சிக்கிணறு, வெள்ளியம்பலம், கம்பத்தடி மண்டபம் வழியாக சுவாமி சன்னதியை அடைவோம். சுந்தரேசுவரரை வணங்கிவிட்டு வீரவசந்தராயர் மண்டபம், மங்கையர்கரசியார் மண்டபத்தைப் பார்த்துவிட்டு ஆயிரங்கால் மண்டபத்தையும் அதனுள் உள்ள கலைக்கண்காட்சியையும் ரசிப்போம். அங்கிருந்து ராஜகோபுரம் வழியாக வெளியே வந்து ஏழுகடலைப் பார்த்துவிட்டு நம் மதுரைப் பயணத்தை முடிக்கலாம். முடிக்கும் தருவாயில் மதுரையின் திருவிழாக்கள் பற்றியும் அருகில் உள்ள முக்கிய இடங்கள் பற்றியும் செய்திகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

 

Comments (0)

You don't have permission to comment on this page.