
வினை தீர்க்கும் மயில்வாகனனின் அனுமதியுடன் நாம் நுழையும் இந்த மண்டபத்தில் ஐந்து நடைபாதைகள் உள்ளன. இந்த மண்டபம் திருமலையின் அமைச்சர்களுல் ஒருவரான மீனாட்சி நாயக்கரால் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அவர் பெயரின் பெயரிலேயே இம்மண்டபமும் அழைக்கப்படுகிறது. அஷ்ட சக்திக்கு அருகாமையில் உள்ள பெரிய மண்டபம் மீனாட்சி நாயக்கர் மண்டபம் ஆகும். இந்த மண்டபத்தில் 110க்கும் மேற்பட்ட யாளிகள் உள்ளன (யாளி-சிங்க உடலும் யானை முகமும்கொண்ட உருவம்)
இது ஆறு வரிசை கற்தூண்களால் தாங்கப்படுகிறது. இரண்டு வழிகளில் கடைகளும், ஒன்றில் கோயில் விழாக்களில் பயன்படுத்தப்படும் கோயில் யானைகள் உள்ளன. நடைபாதையின் மற்றொன்று பெரிய, அழகான பித்தளை திருவாச்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது சிவகங்கை ஜமீன்தாரரால் வழங்கப்பட்டது. இதில் சிறிய விளக்குகள் நிறைய உண்டு. ஒவ்வொரு நாள் மாலையும் அவை ஏற்றப்படுகின்றன. அந்தக் மிக அழகான காட்சி எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் ரம்மியமானதாகத் தோன்றும்.
Comments (0)
You don't have permission to comment on this page.