GrassField

 

முக்குருணிப் பிள்ளையார்

Page history last edited by Pandian R 1 yr ago

சொக்கநாதரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரபலமான முக்குருணிப் பிள்ளையார் (ஒரே கல்லினால் செய்யப்பட்டவர்) அவர். திருமலை நாயக்கர் மதுரைக்குக் கிழக்கே ஒரு கோயிலுக்குக் குளம் வெட்டும்போது இந்த விநாயகரை கண்டெடுத்ததாகவும் அதனை இங்கே நிறுவியதாகவும் கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்றும் மற்றும் சில முக்கிய நாட்களிலும் முக்குருணி அளவு (18 மரக்கால்) அரிசி கொண்டு கொளுக்கட்டை செய்து விநாயகருக்குப் படைப்பது வழக்கம்.

முக்குருணிப் பிள்ளையார் இங்கு வருவதற்குக் கூட ஒரு சுவையான புராணக் கதை சொல்கிறார்கள். முன்னொரு காலத்தில் முக்குருணிப்பிள்ளையார் தற்போது இருந்த இடத்தில், சுவரில் நடராஜர் இருந்ததார். நடனத்திற்கு தலைவனான நடராஜர் பார்வை படும் திசையில் உள்ள வீடுகள், அவரது பார்வையின் உக்கிரம் தாங்காமல் எரிந்து போனதாகவும், உயிர் சேதம் கூட ஏற்பட்டது. அதனைத் தடுக்கும் வகையில், சக்திவாய்ந்த தடையாக முக்குருணிப் பிள்ளையார் சிலையில் அமைக்கப்பட்டது. அதன் பிறகு தீப்பற்றி எரிவதோ, அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பது மதுரை மக்களின் நம்பிக்கையாகும்

Comments (0)

You don't have permission to comment on this page.