GrassField

 

ராணி மங்கம்மாள் மண்டபம்

Page history last edited by Pandian R 1 yr ago

17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், தன் நாட்டிற்கு அருகில் உள்ள மற்ற நாடுகளுடன் சிநேகமான உறவு வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். 15ஆண்டுகாலம் மதுரையை உண்மையாகவும், செங்கோல் வளையாத வண்ணம் ஆட்சி செலுத்திய ராணிமங்கம்மாள், நன்றி கெட்ட மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்று அறியும்போது மனம் கனக்கிறது. இந்தக் குளத்தில் இவர் கட்டிய மார்பிள் பதிக்கப்பட்டுள்ள ஒரு மாடம் உள்ளது.

குறிப்பிட்ட ஒரு விழாவின் போது இறைவனும் இறைவியும் இங்கு வருகிறார்கள். மேல்கூரையில் மங்கம்மாள் அரசி, அவரது பேரன் சொக்கநாதர், திருமரையின் புகழ்பெற்ற தளபதி ராமய்யன் தளவாயின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தில் ராணி, அவரது அமைச்சர் ராமய்யன், அவரது பேரன் விஜயரங்கச் சொக்கநாதர் ஆகியோரது சிலைகள் உள்ளன. ராணி மங்கம்மாள் காலம் முதற்கொண்ட பல ஓவியங்கள் இம்மண்டபத்தில் உள்ளன. அதன் மேற்கூரையில் வரையப்பட்ட மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண ஓவியம் தென்னிந்தியத் திருமணங்களின் சடங்குகளையும், அதன் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்துகிறது. தெய்வங்கள் அனைவரும் பகட்டாக உடையணிந்திருந்து, தெய்வீக மணமக்களைச் சுற்றியிருக்க, மணமகளின் சகோதரர் பெருமாள் (விஷ்ணு) பாசத்துடன் அவர் தங்கையைத் தாங்கி நிற்க, படைப்பாளி பிரம்மா அக்னி முன் வேதங்களை ஓதி நிகழ்ச்சியைச் சரிவர நடத்துகிறார்.

Comments (0)

You don't have permission to comment on this page.