GrassField

 

வெள்ளியம்பலம்

Page history last edited by Pandian R 1 yr ago

உள்பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள பாதையில் நுழைகிறோம். அதே வழியில் கடம்பத்தடி மண்டபமும், வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபமும் இருக்கிறது. இங்கு நடராஜர் சிலை ஒன்று உள்ளது. அவர் சபாபதி என்று அழைக்கப்படுகிறார். அந்தச் சிலை வெள்ளியினால் செய்யப்பட்டது. எனவே வெள்ளியில் அம்பலத்தான் இருக்கும் இடம் வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிரபஞ்சத்தில் சிவபெருமான் நடனம் புரியும் இடங்களில் மதுரை ஐந்தில் ஒன்றாகும். சுவாமி சன்னதியில் உள்ள நடராஜர் கருவரை, வெள்ளி சபை என்று அழைக்கப்படுகிறது. இது தவிற, சிதம்பரத்தில் கனகசபை, திருவாலங்காட்டில் ரத்னசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய இடங்கள் சிவனின் நடன சபைகளாகும்.

 

வெள்ளி சபை பற்றி ஒரு சுவையான புராணக் குறிப்பு உண்டு. பதாஞ்சலி மற்றும் வியாக்ரபதர் இருவரும் நடராஜரின் தீவிர அடியார்கள். அவர்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் சிவனுடன் அமர்ந்து உணவருந்த கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அப்போது அவர்கள் சிவனைத் தங்களுடன் சிதம்பரத்திற்கு வரச்சொல்லி வற்புறுத்தினர். அப்போதுதான் அவர்கள் எப்போதும்போல சிவநடனத்தைக் கண்டு களிக்கலாம் என்று நினைத்தனர். அவர்களை ஏமாற்ற விரும்பாத சுந்தரேசுவரர் அவர்களை மதுரையில் தங்குமாறு வேண்டி, பிறகு, வெள்ளி சபையில் தன் நடனத்தை அரங்கேற்றினார்.

 

வெள்ளியம்பலம் சம்பந்தப்பட்ட மற்றொரு செய்தி; பாண்டிய மன்னன் ராஜசேகரன் (வரகுணபாண்டியன் என்றும் செய்திகள் உண்டு) சுந்தரேசுவரரின் தீவிர பக்தன். 63 கலைகளில் அவன் சிறந்திருந்தார். சோழநாட்டின் தூதுவர் ஒருவர் மதுரை கோயிலுக்கு விஜயம் செய்த போது, அவர் தந்த ஆலோசனையின் படி, மன்னரின் எதிரியான சோழமன்னர் நடனக்கலையில் சிறந்து விளங்கிய அவரிடம் பயிற்சி பெற்றால் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்றான். நடனக் கலைப் பயிற்சிகளின் கடினத்தை உணர்ந்த அவன், இடது காலை மேல்தூக்கியபடி, வலது காலால் எவ்வளவுகாலம் தான் நிற்பது, நடன நாயகனுக்கு கால் வலியெடுக்காதோ என்று மனம் வருந்திய அவனது வேண்டுகோளை ஏற்று காலை மாற்றி ஆடியதாக நம்பிக்கை உண்டு.

 

அதனை நினைவு கூறும் வகையில் இந்தச் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதற்கருகில் அந்த ரிஷிகள் பதாஞ்சலி, வியாக்ரபதர் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன. அவர்களுள் முன்னால் கூறப்பட்டவர் பாமினியின் சமஸ்கிருத இலக்கணத்திற்கு உரை எழுதியவர். அவரது யோகாசனம் பற்றிய செய்திகள் முன்னால் உள்ள விளக்கங்களை விட எளிமையானதாக உள்ளன. இந்த நடராஜர் சிலைக்கு முன் சிறிய சிற்பங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, 60 பிள்ளைகளை உடைய பெண்ணும், மற்றொன்று, மனிதர்களின் நல்லது தீயது போன்றவைகளுக்கு மதிப்பளிக்கும், சித்திரகுப்தர்.

Comments (0)

You don't have permission to comment on this page.